6.9.13

விடைத்தாளை தவறாக திருத்திய ஆசிரியரிடம் நஷ்டஈடு வசூலிக்க உத்தரவு

விடைத்தாளை தவறாக திருத்தியதால், ஓராண்டு படிப்பை இழந்த மாணவனுக்கு, மூன்று லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க, இடைநிலை கல்வி வாரியத்திற்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அந்த நஷ்ட ஈட்டுத் தொகையை, விடைத்தாளை தவறாக திருத்திய ஆசிரியர்களிடமிருந்து வசூலிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் எம்ஃபில் படித்தால் 3-ஆவது ஊக்க ஊதியம் உண்டு

எம்ஃபில் படிப்புக்கு 3-ஆவது ஊக்க ஊதியம் வழங்கலாம் என்ற உத்தரவு அனைத்து ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சிறப்பாக பணிபுரிந்த 370 ஆசிரியர்களை பாராட்டி நல்லாசிரியர் விருதை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வழங்கினார்.

சிறப்பாக பணிபுரிந்த 370 ஆசிரியர்களை பாராட்டி நல்லாசிரியர் விருதை உயர்கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன் வழங்கினார்.
ஆசிரியர் தினவிழாவில் விருது
தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆசிரியர் தினவிழா சென்னை சேத்துப்பட்டில் உள்ள சென்னை கிறிஸ்தவ கல்லூரி பள்ளியில் நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறையின் முதன்மை செயலாளர் .சபீதா தலைமை தாங்கினார்.

உயர்கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் கலந்துகொண்டு, சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களை பாராட்டி அவர்களுக்கு சான்றிதழ்களும், விருதுகளும் வழங்கினார்.

2009ஆம் ஆண்டுக்குப் பிறகு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதல் வழங்கலாம்.இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவு....

புதுடில்லி: ஆசிரியர் பணியிடை மாறுதல் தொடர்பாக இடைநிலை ஆசிரியர் பதிவு மூப்பு இயக்கம் தொடர்ந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது. இதில் 2008-ம் ஆண்டு ஆரம்ப பள்ளி ஆசிரியர்கள்குறிப்பிட்ட மாவட்டங்களில் நியமிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவால், வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என கூறப்பட்டுள்ளது,இந்த வழக்கில் இன்று நடந்த விசாரணையில், 2009-ம் ஆண்டிற்கு பின்னர் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் பணியிட மாறுதல் தரலாம் என தீர்ப்பளித்தது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் 53 ஆயிரம் பேர் தேர்வு பெற வாய்ப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம் கணிப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வில் 53 ஆயிரம் பேர் (8 சதவீதம் பேர்) தேர்ச்சி பெறலாம் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் கணித்துள்ளது. இதற்கிடையே, மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வில் அகில இந்திய அளவில் 77,634 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது 10 சதவீத தேர்ச்சி ஆகும்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் விடுவிப்பு,

உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பழனியப்பன் கல்வித்துறையையும் கூடுதலாக கவனிப்பார்
தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் வைகைச்செல்வன் இன்று அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதனை முதல்வர் அலுவலக செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது.
தற்போது உயர்கல்வித்துறை அமைச்சராக இருக்கும் பழனியப்பன் கல்வித்துறையையும் கூடுதலாக கவனிப்பார்.

Thanks  : Dinamalar

Lok Sabha paves way for pension sector regulator

The Lok Sabha on Wednesday passed the Pension Fund Regulatory and Development Authority (PFRDA) Bill, which seeks to give statutory powers to the interim regulator, constituted way back in 2003 by an executive order.

The pension reforms Bill has fixed the ceiling on foreign direct investment (FDI) in the pension sector at 26% — to move in sync with that for the insurance sector.

Lok Sabha passes PFRDA Pension Bill, 10 key facts

The Lok Sabha today passed the Pension Fund Regulatory and Development Authority Bill 2011, which will open the doors for foreign investment in pension funds. The bill aims to create a regulator for the pension sector and extend the coverage of pension benefits to more people. The Pension Bill has been hanging fire since 2005 when it was first introduced in the Parliament. It was again reintroduced in 2011.
Here are the salient features of the bill:
1.           The Pension Fund Regulatory and Development Authority Bill 2011 will give statutory powers Pension Fund Regulatory and Development Authority (PFRDA) which was established in August 2003 as a regulator for the pension sector.

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 2 தேர்வு அறிவிப்பு

1064 பணியிடங்களுக்கான குரூப் 2 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.
NOTIFICATIONS - 2013
1
14/2013 05.09.2013
05.09.2013
04.10.2013
01.12.2013


சார் பதிவாளர், வணிகவரி இணை ஆணையர் உட்பட 19 பதவிகளுக்கு தேர்வு நடைபெறுகிறது. நாளை முதல் அக்டோபர் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. டி.என்.பி.எஸ்.சி., இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். தேர்வு டிசம்பர் 1ம்தேதி அன்று நடைபெறுகிறது. 

4.9.13

பென்சன் மசோதாவிற்கு லோக்சபா ஒப்புதல்

புதுடில்லி: புதிய பென்சன் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது. உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்களுடன் இன்று (04.09.2013) மசோதா லோக்சபாவில் நிறைவேற்றப்பட்டது.

திருத்திஅமைக்கப்பட்ட அரை ஆண்டு தொழில் வரி விவரம் .....new profeesional tax 1.10.2013.....முதல் அமலாகிறது.

1.10.2013 முதல் இந்த திருத்தி அமைக்கப்பட்ட தொழில் வரி ஆனது செலுத்த வேண்டும்.

மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆசிரியர் தின வாழ்த்துச் செய்தி


செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்துச் செய்தி
வெளியிட்டுள்ளார்.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவு எப்போது?

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு முடிவுகள் 10 நாளில் வெளியிடப்படலாம் எனத் தெரிகிறது.


முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இப்போது சரிபார்க்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் ஒரு வாரத்துக்குள் முடிவடைந்துவிடும். அதன்பிறகு, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.