இரவில் அழைப்பு; காலையில் 'கவுன்சிலிங்'; அடித்து பிடித்து பங்கேற்ற ஆசிரியர்கள்

மதுரையில் தொடக்க கல்வித் துறையில் இரவு அழைப்பு விடுக்கப்பட்டு மறுநாள் காலை 'கவுன்சிலிங்' நடத்தப்பட்டதால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டுள்ளது என்று சிஐடியு மாநில தலைவர் சவுந்தரராஜன் எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.

மாணவியர் அதிகம் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டம்

கர்நாடகா மாநிலத்தில், மாணவியர் அதிக எண்ணிக்கையில் படிக்கும் அரசு பள்ளிகளில், கண்காணிப்பு கேமரா பொருத்த, கல்வித் துறை திட்டமிட்டு உள்ளது.

ஆசிரியர் போட்டி தேர்வு: புதிய விடைத்தாள் அறிமுகம்

ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும், முதுகலை பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வு, ஜன., 10ல் நடக்க உள்ளது. இதை கண்காணிக்க, மாவட்டங்களில் கலெக்டர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு

தமிழக மாணவர்களுக்கு 17 தங்க பதக்கம்

தேசிய அளவில், பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இந்தாண்டு, இப்போட்டிகளை தமிழகம் நடத்துகிறது. சேலத்தில் நடக்கும் இதில், மேஜைப்பந்து, பேட்மிட்டன் உள்ளிட்ட போட்டிகள், பள்ளி மாணவர்களுக்கு

பள்ளி மாணவர் ஆதார் எண்ணை பெற்று பதிவு செய்யுங்கள்: தலைமை ஆசிரியர்களுக்கு கல்வி துறை உத்தரவு

'பள்ளி மாணவர்களின் ஆதார் எண்களை பெற்று, அதை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்' என, தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி 107 சதவீதமாக உயர்வு

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 107சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

PGTRB- ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி!

தமிழகத்தில், வரும் ஜன., 10ம் தேதி முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான போட்டித்தேர்வு நடக்கவுள்ளது. இத்தேர்வுகளில், முறைகேடுகளை தவிர்க்கும் நோக்கில், முதன் முறையாக,புகைப்படத்துடன் கூடிய ஓம்.எம்.ஆர்., சீட் தேர்வர்களுக்கு வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது.

ஜனவரி 25 திருச்சியில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் நடத்த ஏற்பாடுகள் தீவிரம் - மாநில பொதுச்செயலாளர் செய்தி

                         நமது மாநில பொதுச்செயலாளரின்  செய்தி

                     ஜனவரி 25 திருச்சியில் கவன ஈர்ப்பு உண்ணாவிரதம் , ஏற்பாடுகளை குழந்தை,செந்தில், கென்னடி,ரமேஷ் மற்றும் மாவட்ட
 பொறுப்பாளர்கள் செய்து வருகிறார்கள்.அனைத்து மாவட்டங்களும் 
ஆயத்த பணிகளை செய்ய கேட்டுக் கொள்கிறேன்.


                                                 

ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு: ஆன்-லைனில் பதிவு தீவிரம்

ஒன்று முதல் எட்டாம் வகுப்பில், ஆசிரியர் செயல்திறன் மதிப்பீடு முடிந்து, அந்த விபரங்கள் அனைத்தும் ஆன்-லைனில் பதிவு செய்யும் பணி, வட்டார வளமையங்களில் தீவிரமாக நடக்கிறது.

அடுத்த கல்வியாண்டு முதல் கேரளாவில் டிஜிட்டல் புத்தகங்கள்

கேரள பள்ளிகளில், 'டிஜிட்டல்' பாடபுத்தகங்கள், அடுத்த கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நாட்டிலேயே முதல் முறையாக, பள்ளிப் பாடங்கள் அனைத்தும், மல்டிமீடியா பாடங்களாக மாற்றப்பட்டு, காட்சிகள் மற்றும் ஒலிகள் மூலம் பாடங்கள் கற்றுக் கொடுக்கப்பட உள்ளன.

'நெட்' தகுதி தேர்வுஏராளமானோர் பங்கேற்பு

உதவி பேராசிரியர்களுக்கான, தேசிய அளவிலான, தகுதித் தேர்வை நெட், தமிழகத்தில், நேற்று, ஏராளமானோர் எழுதினர்.
பல்கலை மானியக் குழு யு.ஜி.சி., சார்பில், கல்லுாரி உதவி பேராசிரியர்களுக்கான, தேசிய அளவினான, தகுதித் தேர்வு ஆண்டுக்கு இருமுறை, ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுகிறது.

TET: வரும் 19.01.2015 சுப்ரீம் கோர்ட்டில் GO 71& GO 25 & GO 29 எதிராக பதியப்பட்ட வழக்கில் முக்கிய விசாரணை நடைபெற உள்ளது.

வரும் 19.01.2015 சுப்ரீம் கோர்ட்டில் GO 71& GO 25 & GO 29 எதிராக பதியப்பட்ட வழக்கில் முக்கிய விசாரணை நடைபெற உள்ளது.இருதரப்பும் கட்டாயம் ஆஜராக கடிதம் மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

28.12.14

பள்ளிகளில் திருடு போன 'லேப்டாப்'புக்கு தலைமை ஆசிரியரே பொறுப்பு

விருதுநகர்: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் பிளஸ் 2 மாணவர்களுக்கு இலவசமாக 'லேப்டாப்' வழங்கப்படுகிறது. பல பள்ளிகளில் இரவு காவலர் இல்லாததால் லேப்டாப் திருடு போனது. சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் போலீசில் புகார் கொடுத்துள்ளனர்.

அடுத்த கல்வியாண்டில் 10ம் வகுப்புக்கு முப்பருவ கல்வி: பொதுத்தேர்வு முறையில் மாற்றம் வர வாய்ப்பு?

வரும், 2015 - 16ம் கல்வியாண்டில், எஸ்.எஸ்.எல்.சி., எனப்படும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, முப்பருவ கல்வி முறையை அமல்படுத்த, மதிப்பீடு மற்றும் செயல்முறை ஆராய்ச்சித்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர். இந்த திட்டம் அமலுக்கு வந்தால், பொதுத்தேர்வு முறையில் மாற்றம் உட்பட பல பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறி, கல்வி அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
கிரேடு முறை:

குடும்ப பிரச்னையால் அரசுப் பணிகளில் பதவி உயர்வை மறுக்க முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

குடும்ப பிரச்னையை காரணமாகக் கொண்டு அரசு ஊழியரின் பதவி உயர்வை மறுக்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி, மின் பகிர்மானக் கழகத்தில் உதவி தணிக்கை அதிகாரியாக பணிபுரிபவர் ஏ.வேலுசாமி. அவருக்கு 2004-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

பள்ளிகளின் தரம் உயர்ந்தன..! ஆனால் வசதியோ..?

தரம் உயர்த்தப்படும் அரசுப் பள்ளிகளில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. இதனால் மாணவர்களின் கல்வித் தரம் கேள்விக்குறியாகி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 6 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்பட்டன.

தேசிய திறனறித் தேர்வு (NMMS) 24.01.2015 சனிக்கிழமையன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தேசிய திறனறித் தேர்வு (NMMS) 27.12.2014 அன்று நடைபெறுவதாக இருந்தது. பின் 03.01.2015 தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. தற்போது  தேசிய திறனறித் தேர்வு (NMMS)  24.01.2015 சனிக்கிழமையன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


எங்கே செல்கிறது மாணவ சமுதாயம்: தலைமை ஆசிரியரை தாக்கிய மாணவன்

பரமக்குடி அருகே நயினார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியரை, மாணவர் ஒருவர் தாக்கியதாக புகார் செய்யப்பட்டு உள்ளது.

ஆலோசனை மையத்தில் மாணவ, மாணவியருக்கு உளவியல் நிபுணர்கள் தனித்தனியே அவசியம்

தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்காக தொடங்கப்பட்டுள்ள உளவியல் ஆலோசனை மையத்தில், மாணவ, மாணவியருக்கு தனித்தனியே ஆண், பெண் என 2 உளவியல் நிபுணர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

எஸ்எஸ்எல்சி மாணவர்களின் பெயர் பட்டியல் பிரவுசிங் சென்டரில் தயாரிக்க பள்ளிகளுக்கு தடை

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுக்கு மாணவர் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணிகளை தனியார் பிரவுசிங் சென்டரில் மேற்கொள்ள பள்ளிகளுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. 

குரூப் 2A காலி பணியிட தேர்வு சான்றிதழ் சரிபார்ப்பு, கலந்தாய்வுக்கு விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு: தரவரிசை பட்டியல் வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்ட 
அறிக்கை: குரூப் 2 பதவியில் அடங்கிய உதவியாளர், கீழ்நிலைஎழுத்தர்,  கணக்காளர் மற்றும் நேர்முக எழுத்தர் ஆகிய பதவியில்காலியாக உள்ள

நற்சான்றுக்கு அலையும் தலைமையாசிரியர்கள்

மாணவர்களுக்கு நற்சான்று வழங்கும் தலைமையாசிரியர்கள் கல்வித்துறையின் உத்தரவால் அவர்களுக்கே நற்சான்று கேட்டு ஓய்வு பெற்ற கல்வி அதிகாரிகளை தேடி அலைகின்றனர்.

அரசு நர்சிங் பள்ளிகளில் 100 இடங்களுக்கு அனுமதி

வரும் ஆண்டில் அனைத்து அரசு நர்சிங் பள்ளிகளிலும் தலா 100 மாணவிகளை சேர்த்து கொள்ள அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் 23 அரசு நர்சிங் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 11 பள்ளிகளில் 50 இடங்கள், மற்ற பள்ளிகளில் 60 முதல் 90 இடங்கள்

அரசு விடுதியில் மாணவர்களுக்கு ரூ.25க்கு மூன்று வேளை உணவு: கேள்விக்குறியானது தரம்

தேனி: அரசு விடுதி மாணவர்களுக்கு தினமும் ரூ. 25க்கு மூன்றுவேளை உணவு வழங்க வேண்டி உள்ளதால் விடுதி வார்டன்கள் புலம்பி தவிக்கின்றனர். தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், ஆதி திராவிடர் நலத்துறை சார்பில் 4,300 மாணவர் விடுதிகள் இயங்குகின்றன. வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளோர், ஆதரவற்றோர் குழந்தைகளை அரசு

கட்டாய கல்வி சட்டம்: இனி மாணவரை சேர்க்க முடியுமா? கட்டணத்தை அரசு தராததால் பள்ளிகள் சங்கம் முடிவு

கட்டாய கல்வி சட்டம் கீழ், மாணவர்களை சேர்த்த தனியார் பள்ளிகளுக்கு, அதற்கான கட்டணத்தை தமிழக அரசு இதுவரை கொடுக்கவில்லை. எனவே, அடுத்த ஆண்டு சேர்க்கையை நடத்தப் போவதில்லை என, தனியார் பள்ளிகள் தெரிவித்துள்ளன.

பிளஸ் 2 மாணவர்களுக்கு பிப்ரவரி முதல் வாரம் செய்முறைத் தேர்வு: கல்வித் துறை திட்டம்

பிளஸ்2 மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு பிப்ரவரி 7ம் தேதிதொடங்க தேர்வுத்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பட்டியல்கள் தேர்வுத்துறைக்குவந்து

உயர்கல்வித் துறை செயலாளராக செல்வி அபூர்வா நியமனம்

உயர் கல்வித் துறைச் செயலாளராக செல்வி அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார்.இதுகுறித்து தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் 

செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு:
(அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக் குறிக்குள்)

செல்வி.அபூர்வா 
        உயர்கல்வித் துறைச் செயலாளர் 
(தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் நிர்வாக இயக்குநர், இந்திய மருத்துவத் துறை  ஆணையாளர்) 

GROUP - 4 , தேர்விற்கான விடைகள் தேர்வாணையத்தினால் வெளியிடப்பட்டுள்ளது


 Sl.No.
Subject Name
POSTS INCLUDED IN GROUP-IV SERVICES
(Date of Examination:21.12.2014)

         1
         2
         2
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received after 30th December 2014 will receive no attention.

படிக்கும் பள்ளிகளிலேயே எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வுமையம்: அரசுக்கு நோட்டீஸ்

அனைத்து பள்ளிகளிலும் பிளஸ் 2, எஸ்.எஸ்.எல்.சி தேர்வு மையங்களை ஏற்படுத்தக் கோரும் மனுவுக்கு பள்ளி கல்வித் துறை இயக்குநர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

சுதந்திரம் ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டும்!

பாடமும் பாடதிட்டமும் இருக்கவேண்டும். ஆனால் அதை நடத்துகிற
சுதந்திரம் ஆசிரியர்கள் கையில் இருக்க வேண்டும். காலகெடு இருக்க
கூடாது. அனைத்து மாணவனும் முழு திறன் கிடைக்கும் வரை காலம்

திருவள்ளுவர் பிறந்த நாள் - மாணவர்களுக்கு கட்டுரை, ஓவியப் போட்டி

திருவள்ளுவர் பிறந்த நாளையொட்டி மாணவர்கள் கட்டுரை, ஓவியங்களை வரைந்து அனுப்பலாம். அதில் பங்குபெறும் மாணவர்கள் தங்ளுக்குப் பிடித்த இரண்டு திருக்குறளையும், அதற்கான

வருங்கால வைப்பு நிதி தணிக்கைக்கு ஒவ்வொரு ஆசிரியரிடமும் ரூ.250 பணம் வசூல்: ஆசிரியர்கள் எதிர்ப்பு

வருங்கால வைப்பு நிதியை தணிக்கை செய்ய பணம் வசூலிப்பதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தொடக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்கள் ஊதியத்தில் வருங்கால வைப்பு நிதிக்காக ஒரு குறிப்பிட்ட தொகை மாதந்தோறும் பிடித்தம் செய்யப்படுகிறது. இந்த கணக்கு உதவி தொடக்கக்கல்வி அலுவலகங்களில் பராமரிக்கப்படுகிறது. 1996-97 க்கு பின் தணிக்கை செய்யப்படவில்லை.

வேலூரில் பள்ளி மாணவர்கள் செல்போன் பயன்படுத்த தடை: கலெக்டர் உத்தரவு

வேலூர் கலெக்டர் நந்தகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அனைத்து வகை தொடக்க நகராட்சி உயர்நிலை மேனிலைப் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் அனைத்து வகுப்பு மாணவர்களும் பள்ளிகளுக்கு செல்போன் கொண்டு வருவது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும்.

புதிதாக எட்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களுக்கு அனுமதி

விருதுநகர் மாவட்டத்தில் புதிதாக எட்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு மையங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது என, முதன்மைக் கல்வி அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.

மூன்றாம் பருவ பாட புத்தகங்கள் வினியோகிக்கும் பணி துவக்கம்!

ஏழை மற்றும் நடுத்தர மாணவர்கள் கல்வி பயிலும் வகையில், அரசுப்பள்ளிகள் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில், பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் மேம்பட அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. செயல்வழி கற்றல், படைப்பாற்றல் கல்வி போன்ற பல்வேறு புதிய யுக்திகளையும் புகுத்தி வருகிறது.

தமிழ் ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை

மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு பள்ளிக்கல்வி இணைஇயக்குநரகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், 2010-11 மற்றும் 2012ம்  ஆண்டுகளில் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம்பள்ளிக்கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளிகளில் ஆசிரியர்கள் பணி நியமனம்  செய்யப்பட்டனர்.

யானை, சிறுத்தை, காட்டுப்பன்றியுடன் காட்டுக்குள் ஒரு கல்விக் கூடம்: பீதியுடன் படிக்கும் மாணவர்கள்

சுருளியாறு அரசு தொடக்கப்பள்ளிக்கு சிறுத்தை, யானை, காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அடிக்கடி வருவதால் மாணவர்களை பாதுகாக்க முடியாமல் ஆசிரியர்கள் திணறுகின்றனர்.


எஸ்எஸ்எல்சி தேர்வு அட்டவணையில் மாற்றமில்லை: அரசு அறிவிப்பு

21.12.14 அன்று தி இந்து தமிழ் நாளிதழில் 10ம் வகுப்பு பொது தேர்வு அட்டவணையில் மாற்றம் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.
தற்போது பொது தேர்வு அட்டவணையில் எவ்வித மாற்றமும்
இல்லை என்று அரசு தேர்வுகள்
இயக்கக இயக்குனர் தேவராஜன் அறிவிப்பு.

22.12.14

கணினி ஆசிரியர் பணிக்கு பி.எஸ்சி. படிப்பை பதிவு செய்யாமல் எம்.எஸ்சி., பி.எட். படிப்பை பதிவு செய்து இருந்தாலும் பரிந்துரைக்க வேண்டும் , உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

கணினி ஆசிரியர் பணிக்கு பி.எஸ்சி., படிப்பை பதிவு செய்யாமல் எம்.எஸ்சி., பி.எட்., படிப்பை பதிவு செய்து இருந்தாலும் பரிந்துரைக்க வேண்டும் என்று வேலைவாய்ப்பு அதிகாரிக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

TNPSC: குரூப் 4 தேர்வு: 2 லட்சம் பேர் ஆப்சென்ட்;2 மாதத்தில் ரிசல்ட் வெளியீடு.

தமிழகம் முழுவதும் நேற்று நடந்த குரூப் 4 தேர்வில் 2 லட்சம் பேர்தேர்வுஎழுதவரவில்லை. தேர்வுக்கான ரிசல்ட் 2 மாதத்தில் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார் பில் குரூப் 4 பணியில் 4963 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வு நேற்று நடந்தது. 

PG-TRB: முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுபயிற்சிக்கு அழைப்பு

சென்னை ஆசிரியர் தேர்வாணையம் 2015ம் ஆண்டு ஜனவரி 10ல் நடத்தும்முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஈரோடு சென்னிமலை ரோட்டில் உள்ள ஐ.டி.ஐ. அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் 18ம் தேதி முதல் நடக்கிறது.

கருணை அடிப்படையில் பணி நியமனம்: 18 வயது நிரம்பாதோர் மனுக்களைப் பரிசீலிக்க புதிய உத்தரவு

கருணை அடிப்படையிலான பணி நியமனத்தில், 18 வயதை நிறைவுசெய்யாமல் பணியில் சேர்ந்தவர்களின் மனுக்களையும் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசு புதிய உத்தரவு பிறப்பித்தது.

பள்ளி வன்முறைக்கு எதிராக வீதிக்கு வந்த ஆசிரியர்கள்!

'ஆசிரியர்களுக்கும், பள்ளிகளின் உடைமைக்கும் பாதுகாப்பு அளிக்கும்வகையில், தமிழக அரசு உடனடியாக சட்டத்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஆசிரியர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆண்டு தோறும் அதிக அளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் : தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை மனதில் வைத்து ஆண்டு தோறும் அதிகளவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

20.12.14

இன்று (20.12.14) திருச்சியில் TNGTF ன் உண்ணாவிரத போரட்டத்திற்கான ஆயத்தக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது

திண்டுக்கல், ஈரோடு, விழுப்புரத்தை தொடர்ந்து,                                                       
                                   தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு
         1. CPS யை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்திட்டத்தை அமல்படுத்தவேண்டும்,
          2. 2004 முதல் 2006 ஆண்டு  வரையிலான தொகுப்பூதிய காலத்தை  பணிக்காலமாக அறிவிக்க வேண்டும்.
         3. தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் 

                        என்ற கோரிக்கை வலியுறுத்தி திருச்சியில் 
மாபெரும் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போரட்டம் நடத்த முடிவு செய்து அதற்கான ஆயத்த கூட்டம் திருச்சியில் இன்று மாநில பொதுச் செயலாளர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.
       கூட்டத்தில்  மாநில பொறுப்பாளர்களும்,  திருச்சி மாவட்ட பொறுப்பாளர்களும், ஒன்றிய பொறுப்பாளர்களும்  கலந்து கொண்டனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 அரசு பொது தேர்வில் தட்டச்சு பாடம் செய்முறைத் தேர்வு பாடமாக மாற்றம்

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:– தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வில் தொழிற்கல்வி பாடமான தட்டச்சுப் பாடம் கடந்த 1978–1979 ஆம் கல்வியாண்டு முதல் எழுத்துப் பாடமாக இருந்தது.

ஆசிரியரை கேலி செய்த புகார்: மாணவனை பள்ளியில் சேர்க்க அனுமதி

கமுதி அருகே கீழபருத்தியூர் பிச்சை தாக்கல் செய்த மனு: எனது மகன் திருச்சுழி அருகே வீரசோழன் அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2 படித்தார். அரையாண்டு தேர்வின் போது கண்காணிப்பாளரான ஒரு ஆசிரியரை சில மாணவர்கள் கேலி செய்தனர்.

பாலிடெக்னிக் புதிய பாடத் திட்டம்: கருத்துகள் வரவேற்பு

பாலிடெக்னிக்குகளுக்கான பாடத் திட்டத்தை வருகிற 2015-16-ஆம்கல்வியாண்டில் மாற்றியமைக்க தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் அலுவலகம் முடிவு செய்துள்ளது.

மாணவர்களுக்கு என்.சி.சி., கட்டாயமில்லை: மத்திய அரசு.

 கல்வி நிறுவனங்களில், தேசிய மாணவர் படை எனப்படும் என்.சி.சி.,மாணவர்களின் பலத்தை, 2 லட்சத்திலிருந்து, 15 லட்சமாக அதிகரிக்க,மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக, மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், லோக்சபாவில் தெரிவித்தார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: 

652 கணினி பயிற்றுநர்களுக்கான சான்றிதழ் சரிப்பார்ப்பு பணி தற்காலிகமாக நிறுத்திவைப்பு; மாற்று தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு


DIRECT RECRUITMENT OF COMPUTER INSTRUCTOR
POSTPONEMENT OF CERTIFICATE VERIFICATION
Pursuant to the letter dated 18.12.2014 received from the Government in School Education Department, Chennai, the Certificate Verification process for selection of 652 Computer
Instructors is kept in abeyance. The revised dates of Certificate Verification will be announced on Teachers Recruitment Board website later.

Dated: 19-12-2014

Member Secretary

NMMS தேர்வு 27.12.2014க்கு பதிலாக 03.01.2015 அன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளது

,

தகவல்; திரு.பேட்ரிக் ரெய்மாண்ட் TNGTF ,மாநிலப்பொதுச்செயலாளர்

கல்வித்துறையில் ரூ. 37 லட்சம் மோசடி:அதிகாரிகள், ஆசிரியர்கள் மீது வழக்கு

திருநெல்வேலி மாவட்ட கல்வித்துறையில் ௩7 லட்ச ரூபாய் மோசடி செய்த விவகாரத்தில் அதிகாரிகள், தலைமை ஆசியர்கள் மீது வழக்குப் பதியப்பட்டது.

TNPSC: நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான 5-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு 24-ந் தேதி தொடக்கம்.

நேர்காணல் அல்லாத பதவிகளுக்கான 5-வது கட்ட சான்றிதழ் சரிபார்ப்புமற்றும் கலந்தாய்வு 24-ந்தேதி தொடங்க இருப்பதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

அந்தந்த பள்ளிகளிலேயே 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு: வழக்கு தனிநீதிபதிக்கு மாற்றம்

பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வுகளை அந்தந்த பள்ளிகளில் நடத்தக் கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தொடரப்பட்ட வழக்கு தனி நீதிபதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

10, பிளஸ் 2 தேர்வு: அந்தந்தப் பள்ளிகளிலேயே தேர்வு மையங்களை அமைக்கக் கோரி வழக்கு

கிராமப்புற மாணவர்கள் நலன் கருதி 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு மையங்களை அந்தந்தப் பள்ளிகளிலேயே அமைக்க அரசுக்கு உத்தரவிடக் கோரி, சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மதிமுக சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

தமிழக அரசுக்கு உச்சநீமன்றம் அதிரடி உத்தரவு

தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 69 சதவீத இட ஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவதாக கோவையை சேர்ந்த சாகித்யா என்பவர் தமிழக அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

TNPSC :Departmental Examinations, December 2014 Memorandum of Admission (Hall Ticket) published


Departmental Examinations, December 2014
Memorandum of Admission (Hall Ticket)
(Dates of Examinations: 23.12.2014 to 31.12.2014)

           Enter Your Application Number :DED14                                  
                                                                                          Date                  Month             Year
                Enter Your Date of Birth         :                       /                   /   
                                                                                               
NOTE :
Before generating the Hall Ticket, kindly make sure that both Top and Bottom margins of the print area will have only maximum of 5 mm. and set the Page Size as 'A4' so as to generate the Hall Ticket in asingle A4 size paper. This can be adjusted using File->Page Setupoption of the browser.

ஒரு வருடமாக இருந்த பி.எட்., எம்.எட். படிப்புகள் 2வருடங்களாக உயர்வு தமிழ்நாட்டில் பாடத்திட்டங்களும் தயார்

பி.எட். மற்றும் எம்.எட். படிப்புகளின் காலம் ஒரு வருடமாக இருந்தது. அதுவருகிற கல்வி ஆண்டு முதல் 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டை பொறுத்தவரை 2 வருடமாக உயர்த்தப்பட்டுள்ள பி.எட். மற்றும் எம்.எட். படிப்புக்கு பாடத்திட்டம் தயார் நிலையில் உள்ளது.

அரசு பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறை: ஆலோசனை கேட்கிறது எஸ்.சி.இ.ஆர்.டி.,

தமிழகத்தில், அரசு பள்ளிகளை, 'ஸ்மார்ட்' வகுப்பறைகளாக நவீனப்படுத்த, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் - எஸ்.சி.இ.ஆர்.டி., பரிசீலனை செய்து வருகிறது.