நடப்பாண்டில் 3,459 ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றுஅமைச்சர் கே.சி.வீரமணி அறிவித்துள்ளார். 75 ஆசிரியர் சார்ந்தபணியிடங்கள், 340 ஆசிரியர் சாராத பணியிடமும் நிரப்பப்படும் என்றுதெரிவித்துள்ளார். பழங்குடியினர் அதிகம் உள்ள 5 மாவட்டத்தில்மாணவியருக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்படும் என்றும் அவர்
கூறியுள்ளார். 482 அரசுப் பள்ளிகளில் 4,782 மாணவியருக்கு கராத்தேபயிற்சி அளிக்கப்டும் என்றும் வீரமணி தெரிவித்துள்ளார். 32மாவட்டங்களிலும் நடப்பாண்டு அறிவியல் கண்காட்சிகள்நடத்தப்படும் என்றும் வீரமணி தெரிவித்துள்ளார்.
7 மாவட்டங்களில் நடப்பாண்டில் நடமாடும் நூலகங்கள்ஏற்படுத்தப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். விருது பெற்றதமிழாசிரியர்களுக்கு அரசு பேருந்தில் இலவச பயண அட்டைவழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். பன்னாட்டுதிருக்குறள் மாநாடு இந்த ஆண்டில் நடத்தப்படும் என்று அமைச்சர்கி.வீரமணி அறிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக