லேபிள்கள்

1.12.13

2 ஆண்டுகளுக்கு ஒதுக்கீடு : அரசு,உதவி பெறும் பள்ளிகளுக்கு சிறப்பு கல்வி கட்டணம் ரூ.41 கோடி

சிறப்பு கல்வி கட்டண நிதியாக 2 ஆண்டுகளுக்கு, ரூ.41 கோடியை, அரசு ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில், அரசு, உதவி பெறும் நடுநிலை, உயர், மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும், 6 முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, கடந்த 2008 வரை, ஆண்டு சிறப்பு கல்வி கட்டணம், பள்ளிகளில் வசூலிக்கப்பட்டது.

கற்ற கல்வியா ?, வகிக்கும் பதவியா ? எதற்கு முன்னுரிமை – பட்டதாரி ஆசிரியரின் ஏக்கம்

          தொடக்கக் கல்வித் துறையில் கற்ற கல்விக்கு மதிப்பில்லை, வகிக்கும் பதவிக்குதான் முன்னுரிமை  அளிக்கப்படுகிறது என பட்டதாரி ஆசிரியர் வருத்தத்துடன் கூறுகிறார்  
             பள்ளிக்கல்வித்துறை நிர்வாக வசதிக்காக  தொடக்கக்கல்வி அலகு மற்றும் பள்ளிக்கல்வி அலகு எனும் இரு அலகுகளாக 1986 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது.

              1989 ஆம் ஆண்டுக்கு பிறகு தொடக்கக்கல்வித்துறையின் அனைத்து பஞ்சாயத்து யூனியன் பள்ளிகளில் பணியாற்றிய ஆசிரியர்களும் அரசுப்பள்ளி ஆசிரியர்களாக ஈர்க்கப்பட்டு தற்போது வரை பள்ளிக்கல்வித்துறை செயலரின் கீழ் தொடக்கக்கல்வி இயக்குனரின் நிர்வாக அலகில் செயல்படும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றி வருகின்றனர்.