லேபிள்கள்

28.12.13

பணி நிரவலுக்கு பிறகே ஆசிரியர் நியமனம்

உபரி (சர்பிளஸ்) ஆசிரியர்களை பணி நிரவல் செய்த பிறகே, புதிய ஆசிரியர்களை நியமிக்க கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பணிநிரவலுக்கு பிறகு, காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை குறையவாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

தேசிய வருவாய்வழி திறன் தேர்வு: வட்டார அளவில் தேர்வு மையம்

தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்பு, உதவித்தொகை திட்டத்தில் நடக்க உள்ள தேர்வில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, வட்டார அளவில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன.

500 நடுநிலைப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை

500 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டும் என்று இடைநிலை கல்வி இயக்ககம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளது.

27.12.13

பட்டதாரி ஆசிரியர் பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு வழங்குவதற்கான தகுதி வாய்ந்தோர் இறுதி பெயர் பட்டியல் (பாடவாரியாக)

63 வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள் (முதுகலை ஆசிரியர் பதவி நிலையில் உள்ளவர்கள்) பதவியிலிருந்து முதுகலை ஆசிரியர் பதவிக்கு மாறுதலுக்கான பெயர் பட்டியல்

RTI - 2005 - அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு மாதத்திற்கு ஒரு நாள் தற்செயல் விடுப்பும், வருடத்தில் 3 நாட்கள் வரையறுக்கப்பட்ட விடுமுறை (RH) வழங்கலாம் என இணை இயக்குநர் அறிவிப்பு


பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு 28.12.2013 அன்று காலை 9.00 மணிக்கு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


அரசாணை (நிலை) எண்.249, பக(எஸ்.எஸ்.2) துறை, நாள் 09.12.2013. அரசாணையின்படி,

REVISED PG TEACHER PANEL AS ON 01.01.2013 FOR ALL SUBJECTS

பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியருக்கு நாளை கவுன்சிலிங்

பள்ளிக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர், 961 பேருக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கான கவுன்சிலிங், நாளை, 32 மாவட்டங்களிலும் நடக்கிறது.  முதுகலை ஆசிரியர் தகுதி வாய்ந்த பட்டதாரி ஆசிரியருக்கு, இந்த கவுன்சிலிங் நடக்கிறது. அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில், ஆன் - லைன் வழியில் நடக்கும் இந்நிகழ்ச்சியில், சம்பந்தப்பட்ட ஆசிரியர், அந்தந்த மாவட்டங்களில் பங்கேற்க வேண்டும் என்றும், நாளையே, பதவி உயர்வுக்கான உத்தரவுகள் வழங்கப்படும் என்றும், பள்ளிக்கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் அறிவித்துள்ளார்

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்: 49 ஆயிரம் மாணவர்களுக்கான கட்டணத்தைத் திருப்பி வழங்குவதில் தாமதம்

கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் இந்தக் கல்வியாண்டில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட 49 ஆயிரத்துக்கும் அதிகமான ஏழை, நலிவடைந்த பிரிவு மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் இதுவரை திருப்பி வழங்கப்படவில்லை.

26.12.13

மாணவர்களுக்கு ஏதேனும் நேர்ந்தால் தலைமையாசிரியர்களே பொறுப்பு: பள்ளி கல்வித்துறை

"பள்ளியில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியமானது; அதற்கேற்ப தலைமை ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும்; குறைபாடு ஏதேனும் காணப்பட்டால், அதற்கு முழு பொறுப்பு தலைமை ஆசிரியர் ஏற்க நேரிடும்" என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது.

136 பின்னடைவு காலியிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம்


அரை சம்பள விடுப்பின் போது சம்பளத்தை கணக்கிடும் முறை.

உதாரணமாக தாங்கள் அக்டோபர் மாதம் 27 நாட்கள் அரை சம்பள விடுப்பு எடுத்துள்ளீர்கள் எனில்.

செப்டம்பரில் தங்களின் ஊதியம் = Pay-13,380(pay+G.P+P.P) + DA-8697(72%)+ HRA-760+ MA-100=22,937.(உத்தேசமாக)

1,000 மெட்ரிக் பள்ளிகளுக்கு விதிமுறைகள் தளர்வு : நிபுணர் குழு அறிக்கையில் பரிந்துரை :சென்னையில் 75 பள்ளிகளுக்கு சிக்கல்?

'உரிய இடவசதி இல்லாத, 1,000 மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, விதிமுறைகளை தளர்த்தி, தொடர்ந்து இயங்க, நடவடிக்கை எடுக்கலாம்' என, தமிழக அரசிற்கு சமர்ப்பிக்கப்பட்ட நிபுணர் குழு அறிக்கையில், பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. எனினும், சென்னையில், 75 பள்ளிகளுக்கு சிக்கல் ஏற்படும் என கூறப்படுகிறது.

10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜன.2 முதல் செய்முறை பயிற்சி வகுப்பு தொடக்கம்

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும்  செய்முறைத் தேர்வுகள் கட்டாயமாக்கப்பட்டுள்ளதுஇந்த செய்முறைத் தேர்வுகள் கடந்த ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டது. பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும்   சுமார் 8 லட்சம், மாணவர்கள் செய்முறைத் தேர்வு எழுத வேண்டும்.

முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள். சான்றிதல் சரிபார்ப்புக்குப்பின் புதிய ரேங்க் பட்டியலில் இடம்பெறப்போவது யார்?

முதுகலை தமிழ் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்திற்கான எழுத்து தேர்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் 30 மற்றும் 31–ந் தேதிகளில் நடைபெறுகிறது.

25.12.13

அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்


NMMS விண்ணப்பங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் ஒத்திவைப்பு

அரையாண்டு தேர்வு விடுமுறையால் NMMS விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யும் பணி ஒத்திவைக்கப்பட்டுள்ளதுஇதையடுத்து 02.01.2014 முதல் 04.01.2013 வரை www.tndge.in இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

கலக்கத்தில் உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள்: பல லட்சம் கொட்டியும் பந்தாட்டமா

தமிழகத்தில் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் "சர்பிளஸ்' ஆசிரியர்களை கணக்கெடுத்து, அவர்களை இடமாற்றம் செய்ய கல்வித் துறை நடவடிக்கை எடுக்கிறது. ரூ.பல லட்சங்களை கொட்டி பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.